தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பீகாரில் குஜராத் வாக்காளர் எப்படி?; பாஜகவை கடுமையாக சாடிய தேஜஸ்வி

 

பாட்னா: குஜராத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பீகாரில் வாக்காளராக மாறியிருப்பது, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து அக்கட்சி அரங்கேற்றும் பெரும் மோசடி என தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். பீகார் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ‘பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக இருக்கும் பிக்குபாய் தல்சானியா என்பவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

அவர் தனது கடைசி வாக்கினை கடந்த 2024ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத்தில்தான் பதிவு செய்தார். அதன்பிறகு குஜராத் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கியுள்ளார். தற்போது அவர் பாட்னாவின் வாக்காளராக மாறியிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒருவர் சட்டவிரோதமாக இடத்தை மாற்றி வாக்களிப்பது எப்படி சாத்தியம்? பீகார் தேர்தல் முடிந்த பிறகு, இங்கிருந்தும் தனது பெயரை நீக்கிக்கொண்டு அவர் எங்குச் செல்வார்? இதன் பின்னணியில் உள்ள சதியை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக்கொண்டு பாஜக மிகப் பெரிய அளவில் நேர்மையற்ற செயலில் ஈடுபட்டு வருகிறது’ என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

 

Related News