குஜராத்தில் கலவரம் செய்த 6 பேரின் வீடுகள் இடிப்பு
Advertisement
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரின் வீடுகள் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 6 வீடுகளை இடித்து தள்ளினர். இதையொட்டி அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீசார் சேர்ந்து தடியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அது பற்றி துணை ஆணையர் பல்தேவ் தேசாயிடம் கேட்ட போது,‘‘அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.
Advertisement