குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியின் மீதுள்ள 5 பாலங்கள் மூடல்
Advertisement
இந்நிலையில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 5 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகப்பெரிய நர்மதா நதியின் குறுக்கே அமைந்துள்ள பல்வேறு பாலங்களை மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, மோர்பி மாவட்டத்தில் 2 பாலங்கள், சுரேந்திரநகர் மாவட்டத்தில் 3 பாலங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, அவை மூடப்பட்டன. 4 பாலங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகளுக்காக 36 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement