தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியின் மீதுள்ள 5 பாலங்கள் மூடல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் கடந்த 9ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். இதேபோல் நேற்று முன்தினம் ஜூனகத் மாவட்டம் மங்க்ரோல் நகரத்துக்கு அருகே அன்ட்ரோல் மற்றும் கேஷோட் கிராமங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த பாலத்தை இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது சிலர் ஆற்றில் விழுந்தனர்.
Advertisement

இந்நிலையில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 5 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகப்பெரிய நர்மதா நதியின் குறுக்கே அமைந்துள்ள பல்வேறு பாலங்களை மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.

அதன்படி, மோர்பி மாவட்டத்தில் 2 பாலங்கள், சுரேந்திரநகர் மாவட்டத்தில் 3 பாலங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, அவை மூடப்பட்டன. 4 பாலங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகளுக்காக 36 பாலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement