தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத்தில் பொது சிவில் சட்ட வரைவு தயாரிக்க குழு அமைப்பு: 45 நாட்களில் அறிக்கை தாக்கல்

Advertisement

காந்திநகர்: மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வருவது பொது சிவில் சட்டம் எனப்படுகின்றது. ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் பாஜ ஆளும் மாநிலங்கள் இந்த சட்டத்தை ஆதரித்து வருகின்றன. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பாஜ ஆளும் குஜராத் மாநிலத்திலும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் புபேந்திர படேல் கூறுகையில், பொது சிவில் சட்டத்தின் தேவையை மதிப்பீடு செய்யவும், அதற்கான வரைவு மசோதாவை தயாரிப்பதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 45 நாட்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பிறகு பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்றார்.

Advertisement