தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் பள்ளியில் கொடூரம்.. 10ம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி!!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10ம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சீனியர், ஜூனியர் மாணவர்களுக்கு இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இரு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையில் தொடங்கிய மோதல், வன்முறையாக மாறியது. முன்பகை காரணமாக, 10ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தினார்.

Advertisement

இதையடுத்து காயமடைந்த 10ம் வகுப்பு மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரவலான சீற்றத்தைத் தூண்டியது. அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, முதல்வர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வகுப்பறைகள் மற்றும் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தினர். போராட்டக்காரர்கள் பள்ளியின் அலட்சியப் போக்கைக் குற்றம் சாட்டினர். நீதி கிடைக்கும் வரை மாணவரின் உடலை ஏற்க மறுத்துவிட்டனர். உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி பல பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறி, பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. மேலும், இந்த சம்பவம் பள்ளிக்குள் நடக்கவில்லை, வளாகத்திற்கு வெளியே நடந்தது என்றும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி பள்ளிக்குள் கொண்டு வரப்படாமல் காரில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பள்ளி நிர்வாகமே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு போலீசார் உடனடியாக பதிலளித்து, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement