குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் பரவலாக கனமழை: இடி மின்னல் தாக்கியதில் பீகாரில் 8 பேர் உயிரிழப்பு
Advertisement
இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கியத்தில் 6 மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement