தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மலை கிராமத்தில் தூளி கட்டி கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு..!!

குஜராத்: குஜராத் மலை கிராமத்தில் தூளி கட்டி மருத்துவமனைக்கு 5 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் சோட்டே உதேபூர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அங்கு துர்கேடா மலைக்கிராமத்திலுள்ள பாலியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், வேறு வழியின்றி அவரின் குடும்பத்தினர், மூங்கில் கட்டையில் தூளி கட்டி கர்ப்பிணிப் பெண்ணை 5 கி.மீ. தூரத்துக்கு சுமந்து சென்றுள்ளனர்.

Advertisement

பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது போன்ற உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதாகவும்

குஜராத்தில் பல மலை கிராமங்களில் சாலை வசதி உள்பட எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளாகியும் குஜராத்தில் பெரும்பாலான மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. குஜராத்தின் ஊட்டி உதெப்பூருக்கு சாலை அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. சாலை இல்லாததால் மருத்துவமனைக்கு 5 கி.மீ. தூரம் தூளியில் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News