தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவாரகா, கட்ச் மட்டுமல்லாது போர்பந்தரிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துவாரகாவில் சுமார் ரூ.59 கோடி மதிப்புள்ள 115 போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கின. கட்ச் கடற்கரையில் ரூ.61 கோடி மதிப்புள்ள 60 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement

உலகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில காலமாகவே போதைப் பொருள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு முறைகேடான வழிகளில் போதைப் பொருளை இந்தியாவுக்குள் எடுத்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி இருப்பதுதான். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் குஜராத்தில் முக்கிய கடற்கரை பகுதிகளில் 200 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பிடிபட்டுள்ளன. இன்று, துவாரகாவில், ரூ.58,82,60,000 மதிப்புள்ள 115 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்ச் புஜில், ரூ.61,66,34,500 மதிப்புள்ள மேலும் 60 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குஜராத் கடற்கரைகளில் அடுத்தடுத்து போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்குவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 40.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் குஜராத்தின் கட்ச் பகுதியில் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News