தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்து: பலி 16ஆக உயர்வு

குஜராத்: ராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 16ஆக உயர்வு உயந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மீது இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென மேம்பாலத்தின் மத்திய பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
Advertisement

அந்நேரம் அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன், ஒரு ஆட்டோ போன்றவை ஆற்றில் விழுந்தது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். ஒரு டேங்கர் லாரி இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பாதி வெளியில் வந்த நிலையில் கீழே விழும் வகையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது அதில் இரு இருசக்கர வாகனங்களும் சென்றது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. அவை தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதி அதிக ஆழம் கொண்டது கிடையாது. எனவே மீட்புப்பணியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரிய சத்தம் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும், போலீஸாரும், பேரிடர் மீட்புப்படையும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Related News