தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்

சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் உள்ளிட்ட அனைத்து மணி மண்டபங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை இன்று (04.05.2024) செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Advertisement

காந்தி மண்டப வளாகம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவிடம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், தியாகிகள் மணிமண்டபம், வ.உ.சி. செக்கு, திறந்தவெளி அரங்கம், காந்தி அருங்காட்சியகம், இராஜாஜி நினைவகம் மற்றும் இராஜாஜி நினைவாலயம் ஆகிய மணி மண்டபங்களையும், பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அவ்வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் வெளி முகமை ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடி, பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகம், காமராஜர் நினைவகம் மற்றும் பக்தவச்சலம் நினைவகம் ஆகியவற்றில் சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த கட்டிடப் பணிகளையும் இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வளாகத்தை மேலும் மேம்படுத்தும் பொருட்டு உடனடியாக திட்ட மதிப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் எம்.ஸ்ரீதரன், செயற்பொறியாளர் இ.இம்மானுவேல் ஜெய்கர். உதவி செயற்பொறியாளர் திருமதி அருட்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வெளிமுகமை ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News