தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரி அருகே நடைபெற்ற காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சான்றிதழ்: டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே, ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு சான்றிதழ்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழ்நாடு காவல்துறை, ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் துப்பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பள்ளி பயிற்சி மையம் துப்பாக்கி சுடு தளத்தில் கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆண் காவலர்களுக்கான போட்டிகள் தனியாகவும், பெண் காவலர்களுக்கான போட்டிகள் தனியாகவும் நடத்தப்பட்டன.
Advertisement

இதில், மொத்தம் 13 வகையான போட்டிகள் 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. ரைபில் பிரிவு 5 போட்டிகள், பிஸ்டல் ரிவால்வர் பிரிவு 4 போட்டிகள் மற்றும் கார்பைன் ஸ்டன் கன் பிரிவு 4 போட்டிகள் இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு நகரங்கள், மண்டலங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 204 ஆண் போட்டியாளர்கள் 9 அணிகளாகவும் 104 பெண் போட்டியாளர்கள் 8 அணிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதனைதொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்ற அணிகளுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற் கேடயங்களை அளித்து வாழ்த்துரை வழங்கினார். இதில், ஆண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி- 2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை தெற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் ஆயதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன.

பெண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025-ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை மேற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல வடக்கு மண்டலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் சென்னை மாநகர காவல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன. இவை தவிர ஆண், பெண் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர், பிஸ்டல் பிரிவிலும் கார்பைன் ஸ்டன்கன் பிரிவிலும் வழங்கப்பட்டன.

Advertisement

Related News