தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடலூர், பந்தலூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்க ‘இறந்தவர்’ போல படுத்து போராட்டம்

கூடலூர் : கூடலூர், பந்தலூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் குண்டும் குழிகள் அருகில் இறந்தவர் போல படுத்து நூதன போராட்டம் நேற்று நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சாலைகள் சீரமைக்காமல் உள்ளதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் செப்பனிடப்பட்ட சாலைகள் குறுகிய காலத்தில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். உயிர் காக்கும் அவசர நோயாளி ஊர்திகளை கூட இயக்க முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு வரும் நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்காமல் மாவட்ட நிர்வாகம், தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகள் அலட்சியம் செய்வதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சாலையில் உள்ள பள்ளத்தில் சவப்பெட்டி வைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் போலீசார் சவப்பெட்டியை வைத்து போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘இறந்தவர்’ போல் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நூதன முறையில் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.