தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை பந்திப்பூர் வனப்பகுதியில் லாரியை மறித்து காய்கறிகளை தின்ற காட்டு யானைகள்

*போக்குவரத்து கடும் பாதிப்பு

Advertisement

கூடலூர் : ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காய்கறி லாரியை காட்டு யானைகள் வழிமறித்து காய்கறிகளை நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையில் கக்கநல்லா- பந்திப்பூர் இடையே வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை அடிக்கடி காட்டு யானைகள் வழிமறித்து அவற்றில் உணவு தேடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதேபோல் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கர்நாடக எல்லை பந்திப்பூர் சோதனை சாவடிக்கு சற்று முன்பாக மைசூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு லாரி ஒன்றை இரண்டு யானைகள் வழிமறித்துள்ளன. இதில் பயந்து போன ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்து தப்பினார்.

யானைகள் லாரியின் அருகே நின்று உணவு தேடியதால் இருபுறமும் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. லாரியின் தார்ப்பாயை கிழித்து உள்ளே இருந்து காய்கறி மூட்டைகளை இழுத்து போட்டு தின்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளை விரட்டி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர்.

Advertisement