தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு எதிரொலி; அரசுப் பத்திரங்களின் வருவாய் திடீரென 6.5% உயர்வு: வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மறைமுக வரி சீர்திருத்த அறிவிப்பால், அரசு கடன் வாங்குவது அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அரசுப் பத்திரங்களின் வருவாய் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) தற்போதுள்ள நடைமுறையில் இருக்கும் வரிவிதிப்பு அடுக்குகளைக் குறைத்து, அவற்றை சீரமைக்க உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால், ஒன்றிய அரசின் வருவாய் குறையக்கூடும் என்றும், அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு சந்தையில் இருந்து கூடுதலாகக் கடன் வாங்க நேரிடும் என்றும் வங்கி கருவூல அதிகாரிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

Advertisement

இதன் எதிரொலியாக, கடந்த திங்கட்கிழமை அன்று 10 ஆண்டு முதிர்வு கொண்ட அரசுப் பத்திரங்களின் வருவாய், ஒரே நாளில் 10 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.50 சதவீதமானது. இது, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, 14 மாதங்களில் இல்லாத மிக அதிகமான ஒருநாள் உயர்வாகும். இதுகுறித்து பிரபல வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி. ரெட்டி கூறுகையில், ‘வரி சீர்திருத்தங்கள் இயல்பாகவே பணவீக்கத்தைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றாலும், முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைவாக உள்ளது. எனவே அதிக பத்திரங்கள் சந்தைக்கு வரும் என்பதே கவலையாக உள்ளது’ என்றார். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து அரசுப் பத்திரங்களின் வருவாய் 13 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த வாரம், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் புவர்ஸ், இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்தியதைத் தொடர்ந்து பத்திரங்களின் வருவாய் சற்று குறைந்திருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு சீரமைப்பு, நுகர்வு நிலைக்குள் நுழையும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து எம்கே குளோபல் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா கூறுகையில், ‘மறைமுக மற்றும் நேரடி வரிக் குறைப்பால், 2026ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.2 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மற்றும் ஈவுத்தொகை மூலம் ஈடுசெய்யப்படலாம். இருப்பினும், குறுகிய காலத்தில் கூடுதல் கடன் பத்திர விற்பனை, பத்திரங்களின் வருவாய் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்’ என்றார். பொதுவாக ‘அரசுப் பத்திரங்களின் வருவாய்’ என்பது அரசு தனது செலவுகளுக்காக வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் உண்மையான வருமானமாகும். இவை அரசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையான வட்டி விகிதத்திலிருந்து மாறுபட்டது. சந்தையில் ஒரு பத்திரத்தின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து அதன் விலை மாறும்போது, இந்த வருவாயும் மாறும். பத்திரத்தின் சந்தை மதிப்பு குறையும்போது, அதன் வருவாய் உயரும்.

மாறாக, சந்தை மதிப்பு உயர்ந்தால், வருவாய் குறையும். சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் காரணமாக, அரசுப் பத்திரங்களின் வருவாய் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பத்திரங்களின் வருவாய் உயர்ந்தால், வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரக்கூடும். இதனால் பொதுமக்களின் மாதத் தவணைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அரசு புதிய திட்டங்களுக்காகக் கடன் வாங்கும்போது அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் உற்றுநோக்கும் முக்கியக் காரணியாக அரசுப் பத்திரங்களின் வருவாய் விளங்குகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News