தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமல்; முதல் நாளில் கார்கள் விற்பனை அமோகம்

 

Advertisement

புதுடெல்லி: குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலான முதல் நாளில் நாடு முழுவதும் கார்கள் விற்பனை அமோகமாக நடந்ததாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டியை 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றியதால் பல பொருட்களின் வரி குறைந்துள்ளது. இந்த முக்கிய மாற்றத்துடன் கூடிய புதிய ஜிஎஸ்டி நேற்று முன்தினம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதையொட்டி, முதல் நாளிலேயே கார்களின் விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 80 ஆயிரம் நுகர்வோர் விசாரணைகள் பதிவாகியுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 30 ஆயிரம் கார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது 35 ஆண்டுகால வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச நடவடிக்கை என்று அந்நிறுவனம் கூறி உள்ளது. சிறிய ரக கார்களுக்கு பதிவு செய்வது வழக்கமான பண்டிகைக் காலங்களை விட 50 சதவீதம் அதிகரித்தது.

ஹூண்டாய் நிறுவன விற்பனையாளர்களும் ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளனர். இது 5 ஆண்டுகளில் சிறந்த செயல்பாடாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 10 ஆயிரம் கார்களையும் விநியோகித்துள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் விசாரணையைப் பெற்றுள்ளது. இதே போல, ஏசி விலை குறைந்துள்ளதால் கடந்த ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக ப்ளூஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement