தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பு நுகர்வோரை சென்றடைய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: ஜி.எஸ்.டி வரி குறைப்பு நுகர்வோரை சென்றடைய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஒரேநாடு ஒரேவரி எனும் கொள்கைக்கு முரண்பாடாக 4அடுக்கு வரியாக விதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறியிருப்பதை பேரமைப்பு தொடர்ந்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதோடு, மாநில அரசும் உரிய அழுத்தம் தர வலியுறுத்தி வந்தது. பேரமைப்பின் 42வது மாநில மாநாட்டின் தீர்மானங்களுள் மிக முக்கியமான தீர்மானமாக ஒரே நாடு, ஒரே வரி என்கிற முழக்கத்தை முன்னெடுத்திட பேரமைப்பு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திருந்தது.

இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பின்படி வரி சீர்திருத்தம் மூலம், ஈரடுக்கு வரியாக மாற்றி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒப்புதல் பெற்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொதுமக்களையும், நுகர்வோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பேரமைப்பின் விருப்பமும், கோரிக்கையும் ஆகும். ஆதித ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் அடித்தட்டு, நடுத்தர நுகர்வோர்கள் பயன்பெற முடியாத நிலைமையை கருத்தில் கொண்டு, பல்வேறு பொருட்களுக்கு வரிச்சலுகை இப்போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, தயாரிப்பாளர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள், விற்பனை விலையை கூட்டி, ஒன்றிய அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்பு நுகர்வேரை சென்றடையாத நிலையை தயாரிப்பாளர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றது. இத்தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, வரிகுறைப்பு நுகர்வோரையும் பயனாளர்களையும் சென்றடையும் வகையில், அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்து, உரிய நடவடிக்கை எடுத்து நுகர்வோர் நலன் பாதுகாத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News