தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது?: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி

சென்னை: ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றைய தினம் செப்டம்பர்.3ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்தார். பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில், இது குறித்து முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில், ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்தது போல் இருந்துவிட்டது. ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் இது 8 ஆண்டுகாலம் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? மெதுவான வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடனா? குறைந்து வரும் குடும்ப சேமிப்பா.? என கேள்வி எழுப்பினார்.

Advertisement

Related News