தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிட எண்ணிக்கை மேலும் 645 அதிகரிப்பு: காலிப்பணியிட எண்ணிக்கையை இரண்டாவது முறையாக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 645 அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக்காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3,935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன.

Advertisement

இந்த பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடந்தது. இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதினர். எழுத்து தேர்வை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், ‘‘குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது. இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி 727 அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் விஏஓ பணியிடங்கள் எண்ணிக்கை 218 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 1969 ஆகவும், தட்டச்சர் பணியிடங்கள் 1392 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி நேற்று இரண்டாவது முறையாக மேலும் உயர்த்தியுள்ளது. குரூப் 4 காலிபணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பணியிடங்களுக்கு தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும். 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4 பணிகள்) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது. 2025-ம் ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News