தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்கறிஞர்களுக்கான குழு விபத்து காப்பீடு திட்டம்; நவம்பர் 10ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்த வேண்டும்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய விபத்து காப்பீட்டு பிரிமியம் தொகையை வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர்களுக்கான புதிய 999 குழு விபத்து காப்பீட்டுத் திட்டம் கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் சமீபத்தில் தொடங்கிவைத்தனர்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நேஷனல் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு பெற முடியும். மருத்துவ சிகிச்சை பெற 3 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுக்கும்போது 50 வாரங்களுக்கு 6,000 ஆயிரம் வரை வழங்கும் வகையிலான இந்த கூட்டு காப்பீட்டு திட்டத்தில் சேர பார் கவுன்சில் இணையதளம் வாயிலாக வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 13ம் தேதி முதல் கூட்டு காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அக்டோபர் 13 முதல் அடுத்தாண்டு அக்டோபர் 12 வரையிலான ஓராண்டுக்கு, இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இதற்கான பிரிமியம் தொகையை வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News