தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கையெறி குண்டு,ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்; பஞ்சாப்பில் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய 2 பேர் கைது

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் உளவு துறையின் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,

அமிர்தசரஸ் போலீசார், மத்திய அரசு ஏஜென்சிகள் ஒத்துழைப்புடன் அமிர்தசரஸ் போலீசார் மெஹ்தீப் சிங் , ஆதித்யா என்ற ஆதி ஆகிய 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கையெறி குண்டு, ராக்கெட் லாஞ்சர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமிர்தசரஸில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

பெரோஸ்பூர் சிறையில் உள்ள ஹர்பிரீத்சிங் என்ற விக்கியுடன் தொடர்பில் இருந்தனர். ஹர்பிரீத் சிங்குக்கு ஐஎஸ்எஸ்யுடன் தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்களை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேஹ்தீப் சிங் வடாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஆதி பாகாசின்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர்கள் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement