தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை கல்லறைத் திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

இன்று ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் ஐஸ் மல்லி 600 ரூபாயில் இருந்து 800க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை 300ல் இருந்து 400க்கும் கனகாம்பரம் 300ல் இருந்து 2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், அரளி பூ 100 ரூபாயில் இருந்து 300க்கும் சாமந்தி 100ல் இருந்து 200க்கும் சம்பங்கி 80ல் இருந்து 200க்கும் பன்னீர் ரோஸ் 60ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 80ல் இருந்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’இன்று கல்லறை திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அனைத்து பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுவதால் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

Advertisement

Related News