தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தோல் ஏற்றுமதி கவுன்சில், கான்படெரேஷன் ஆப் அபர்மேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Advertisement

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக, புதிய சிட்கோ தொழிற்பேட்டை கோரிக்கைகள், ஜிஎஸ்டி ஆலோசகர்கள் நியமனம், எஸ்சி/எஸ்டி கொள்முதல் கொள்கை, சிட்கோ, தொழிற்பேட்டைகளுக்கு பேருந்து வசதி, எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோர்களுக்கு சிட்கோ தொழில்மனை ஒதுக்கீடு அதிகரித்தல் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

தொழிற்கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், மதுமதி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்யா நீலம், உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News