தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரானைட் முறைகேடு வழக்கில் மாஜி கலெக்டர் சகாயம் சாட்சியம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியை மீறி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்ேபாக்கு நிலங்களிலும் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ல் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய கலெக்டர் சகாயம் கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருந்தார்.

Advertisement

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு சட்ட ஆணையரும், விசாரணை அதிகாரியுமான சகாயம் தலைமையிலான குழுவினர், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளித்தனர். இக்குழு அறிக்கை அடிப்படையில் வழக்குகளின் விசாரணை மதுரையிலுள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மதுரை மாஜி கலெக்டர் அன்சுல்மிஸ்ரா ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விக்கிரமங்கலம் மற்றும் ஒத்தக்கடை போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிபதி எஸ்.ரோகிணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியும், மதுரை மாஜி கலெக்டருமான சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் விசாரணையை நவ.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News