தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

 

Advertisement

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன்(27).இவரது மனைவி சுகன்யா(26). தம்பதிக்கு பிரகாஷ்(4) என்ற மகனும்,ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா(55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில்,வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது. உடனே அசலா, பேத்தி ஹேமாஸ்ரீ யை கையில் தூக்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி தப்பி ஓட முயன்றார்.

மாரியப்பன் மனைவி சுகன்யா, மகன் பிரகாசுடன் மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கினார். இந்நிலையில் வெளியே நின்ற யானை அசலா மற்றும் குழந்தை ஹேமாஸ்ரீ யை மூர்க்கத்தனமாக தாக்கியதில் இருவரும் இறந்தனர்.

தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் வந்து யானையை விரட்டினர். வனத்துறையினர் முதற்கட்ட உதவித்தொகையாக குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கினர். உடற்கூறாய்வுக்குப்பின் உடல்களை பெற்று திரும்பிய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை- கோவை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

Advertisement