தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

வால்பாறை: வால்பாறை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் உமாண்டி முடக்கு பிரிவில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவரது தாய் அசாலா (55), மகள் ஹேமா ஸ்ரீ (3). மகன் ஒருவரும் உள்ளார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் வீட்டின் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அசாலா, தனது பேத்தி ஹேமா யை தூக்கி கொண்டு முன் பக்க கதவை திறந்தார்.

Advertisement

அப்போது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் குழந்தை ஹேமா ஸ்ரீ பலியானது. படுகாயமடைந்த அசாலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அசாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement