தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றில் மீன்பிடிக்கும் போது தண்ணீரில் மூழ்கி தாத்தா, பேரன் பலி: குளத்தில் குளித்த தாய்-மகன் சாவு

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை தாத்தா பாலகிருஷ்ணனுடன் (70) கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூவரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதில் விக்னேஷ் மீட்கப்பட்டான். தாத்தா பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார். கிரிநாத்தை தேடும் பணியில் நேற்று காலை தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

Advertisement

இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. அதை நிறுத்தி தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் வந்து அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின் மக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

ராமநாதபுரம்: ஆந்திராவை சேர்ந்த சிலர் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் சாய்பாபா படம், சிலை வைத்து ராமநாதபுரம் நகரின் வீதிகளில் கடந்த சில நாட்களாக வலம் வருகின்றனர். இந்த குழுவில் உள்ள ஆந்திர மாநிலம், கொழமுடை பகுதியை சேர்ந்த ஏழுகொண்டால் மனைவி பென்சலம்மாள் (33) நேற்று ராமநாதபுரம் அருகே குயவன்குடி சாய்பாபா கோயில் பகுதியிலுள்ள ஒரு குளத்தில் இரு மகன்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு மகன் மூழ்கியுள்ளான். உடனே பென்சலம்மாள், மற்றொரு மகன் நவீன் (12) ஆகியோர் அவனை காப்பாற்றச் சென்றனர். அப்போது இருவரும் மூழ்கி இறந்தனர். மற்றொரு மகன் மீட்கப்பட்டான்.

Advertisement