தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளி கல்வி செயலாளர், நிதித்துறை செயலாளருக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் தேவராஜூலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அத்திமஞ்சேரிப்பேட்டை திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழக அரசு 2003ம் ஆண்டு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று அதே ஆண்டு ஆகஸ்ட் 14ல் தெலுங்கு மொழி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்த நிலையில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 2003 ஆகஸ்ட் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை அதே ஆண்டு ஏப்ரல் 1 முதல் அதாவது முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்தது.

Advertisement

இதனால், என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே தேர்வு நடவடிக்கை தொடங்கப்பட்டதால் என்னை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்க வேண்டும் என்று 2023ல் ஆண்டு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் தகுந்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று 2024 அக்டோபரில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால் பள்ளி கல்வி துறை செயலர், நிதி துறை செயலர் ஆகியோருக்கு எதிராக தேவராஜுலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முபு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி துறை செயலர் சந்திர மோகன் ஐ.ஏ.எஸ்., நிதி துறை செயலர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., அக்கவுண்ட் ஜெனரல் அனிம் செரியன் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement

Related News