நீலகிரி, கொடைக்கானலில் இ பாஸ் முறையை அரசு திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா வேண்டுகோள்
Advertisement
இதனை ரத்து செய்யக் கோரி விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல எவ்வித தடையும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல், அவர்கள் சுற்றுலா தொழிலை மேம்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்த இது போன்று இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement