தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர்: லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து திடீரென அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக திருமண மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக மண்டப மேலாளரான அம்மாபாளையத்தை சேர்ந்த துரைராஜ், பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
Advertisement

விண்ணப்ப மனுவை விசாரித்த துணை தாசில்தார் பழனியப்பன்(49) தடையின்மை சான்று வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின்படி நேற்று மாலை பெரம்பலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற துரைராஜ், அங்கிருந்த துணை தாசில்தார் பழனியப்பன், விஏஓ நல்லுசாமியிடம்(42) ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.

அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் திடீரென தனக்கு மயக்கம் வருகிறது, நெஞ்சு வலிக்கிறது என போலீசாரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்றிரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக ஒப்படைத்து விட்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சையிலிருந்த பழனியப்பனை திடீரென காணவில்லை.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை தேடி நாரணமங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு இன்று ெசன்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். முன்னதாக விஏஓ நல்லுசாமியை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Advertisement