தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை; சமையல் ‘காஸ்’-ஐ சுவாசித்து அரசு ஊழியர் தற்கொலை: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

போபால்: மத்தியப் பிரதேசம், ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண் கேவத் (35) என்பவர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில், இவர் தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றினர். அப்போது, சமையல் காஸ் சிலிண்டரின் திருகு திறந்த நிலையிலும், அதன் குழாய் நேரடியாக அவரது வாயிலும் வைக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான சமையல் காஸ்-ஐ சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். குடலுக்குள் காஸ் சென்றதால், அவரது உடல் முற்றிலும் விறைத்துப் போயிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த லக்ஷ்மி நாராயண் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், அவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கடன் சுமையால் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், மன அழுத்தமும் அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்தவரின் மூத்த சகோதரர் கூறுகையில், ‘எனது சகோதரரின் அருகில் வசிக்கும் என் சகோதரிதான், லக்ஷ்மிநாராயண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தபோது, காஸ் சிலிண்டர் குழாய் அவரது வாயில் வைக்கப்பட்டிருந்த கொடூரமான காட்சியைக் கண்டோம்’ என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News