தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவர்னர் மாளிகை, கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: தலைமை செயலகம் மற்றும் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தலைமை செயலகம் வாரத்தின் முதல் நாளான நேற்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. அப்போது திடீரென அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து உடனே ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

அதன்படி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் தலைமை செயலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, ஊழியர்கள் அனைவரும் சிறிது நேரம் வெளியேற்றப்பட்டனர். ஒரே நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையில் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல், புரளி என்று தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதேபோல் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் தொடர்பு கொண்டு வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் கவர்னர் மாளிகை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அங்கேயும் எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement