தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆளுநர் ரவி மீண்டும் டெல்லி பயணம்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து புதுடெல்லிக்கு கடந்த 20ம் தேதி 4 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே புறப்பட்டு சென்றிருந்தார். அங்கு ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது தமிழக விவசாயிகளின் நிலை குறித்து விளக்கி பேசியதாக, தனது வலைதளப் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருந்தார். பின்னர் டெல்லியில் 4 நாள் பயணத்தை முடித்து, நேற்று மாலை விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னைக்குத் திரும்பியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று காலை 8.55 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக மீண்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உடன் சென்றனர். பின்னர் டெல்லியிலிருந்து இன்றிரவு 10.30 மணியளவில் ஏர்இந்தியா விமானம் மூலமாக சென்னைக்குத் திரும்புகிறார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பயணிகளுடன் காலை 8.55 மணியளவில் புதுடெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம் திடீரென காலதாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விமானம் சுமார் ஒன்றேகால் மணி தாமதமாக, காலை 10.15 மணியளவில் சென்னையில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றது.

Advertisement

Related News