தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுசீந்திரம் கோயிலில் கவர்னர் சாமி தரிசனம்: சிற்ப வேலைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்

 

Advertisement

சுசீந்திரம்: சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு நேற்று வந்தார். அதைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் கவர்னர் ஓய்வு எடுத்தார். அப்போது சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று காலை 8.30 மணி அளவில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் காரில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் கோயிலில் தட்சிணாமூர்த்தி, தாணுமாலயன் சுவாமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள சிற்ப வேலைபாடுகள், இசை கல்தூண்கள் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின்னர் கவர்னர் காரில் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News