தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை : காந்தி மண்டபத்தை சுத்தம் செய்தபோது மதுபாட்டில்களை பார்த்ததாக ஆளுநர் ரவி கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். மாநகராட்சி இரவு நேரங்களில் அனைத்து இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது, அவ்வளவு பெரிய மெரினா கடற்கரையை மாநகராட்சி ஊழியர்கள் தினமும் சுத்தம் செய்து வருகின்றனர்.
Advertisement

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி, மேலும் ஆளுநரின் கதாகாலட்சேபம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கமலாலயத்துக்குப் போட்டியாக ஒரு இடம் உள்ளது என்றால் அது ராஜ்பவன்தான்; ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. மேலும் தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஒ. போல ஆளுநர் செயல்படுவதாகவும் அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது; மாநில அரசால் அதனை செயல்படுத்த முடியாது என்றும் கூறினார். மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Advertisement

Related News