தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு :கோவையில் பரபரப்பு

கோவை: கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர். வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பினர். ஆனால் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி, கருப்பு வண்ண ஓவர் கோர்ட் அணிந்தபடி பங்கேற்றார்.கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Advertisement

இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கருப்பு உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகளை அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த போலீசார், அவர்களை வேறு உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர். கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருப்பு நிற கோட் அணிந்தபடி நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபற்றி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்திருந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது’’ என்றார்.

Advertisement

Related News