ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் திமுகவை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா? ராஜீவ் காந்தி கேள்வி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பாஜக உறுப்பினராக செயல்படும் போது தான் கஷ்டப்பட்டு, படித்து வாங்கிய பட்டத்தை ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் திமுகவை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா என அண்ணாமலைக்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தங்கை ஜீன் ஜோசப்க்கு வாழ்த்துகள். உங்களின் சுயமரியாதை உணர்வு ஆளுநருக்கு சவுக்கடி என்றும் கூறினார்.