தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளதால் மீண்டும் ஆட்சி அமைப்போம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாடி மேம்பாலம் அருகே ரூ.53 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியில் 188 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மீன் அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மீன் அங்காடியை வரும் 20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Advertisement

திருசெந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. வடசென்னை பகுதிகளில் 80 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஏகோபித்த ஆதரவோடு முதல்வர் நிச்சயம் ஆட்சியில் அமருவார். கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என பாஜ தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கின்ற ஆணையம் தேர்தல் ஆணையம். அவ்வாறு இருந்தால் சொல்லி நீக்க சொல்லட்டும். யார் வேண்டாம் என்று தடுத்தது. ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளதால், நேர்மையாக தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என கூறியவர் முதல்வர். போலி வாக்காளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement