தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி

தர்மபுரி: பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30பேர் வாந்தி மயக்கம் அடைந்தனர். இதில் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்சான்பயால் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.

Advertisement

40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவை அருந்தியுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவர்கள் சிலர் மயக்கம் வருவது போல் இருப்பதாக உணர்ந்துள்ளனர். இந்நிலையில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென்று வாந்தியெடுத்து, பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 12பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 18 மாணவ, மாணவிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் சமையல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், பாலக்கோடு போலீசாரும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News