தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வை கோவையில் நாளை தொடங்குகிறார்

Advertisement

கோவை: அனைத்து மாவட்டங்களிலும் அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நாளை கள ஆய்வு தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

அந்த வகையில் நாளை (5ம் தேதி) கோவை மாவட்டத்தில் இருந்து முதல்வர் தனது கள ஆய்வை துவங்குகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், விளாங்குறிச்சியில் உள்ள ஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து மாலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர், அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 6ம் தேதி காலை கோவை மத்திய சிறை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பேசுகிறார். மதியம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கோவையில் முதல்வர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். மூன்றாவது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கணபதி ராஜ்குமார் எம்.பி., துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News