தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

37 அரசு அலுவலகங்களில் ரூ.37.74 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள், சுற்றுச்சூழல்துறை அலுவலகங்கள், தீயணைப்பு துறை அலுவலகங்களில் அதிகளவில் பரிசு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயனாளிகள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அன்பளிப்பு அளிக்கப்படுவதாக லஞ்ச ஒழித்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது.

Advertisement

அந்த புகாரை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் என மொத்தம் 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத 37 லட்சத்து 74 ஆயிரத்து 869 ரூபாய் ரொக்கம், பட்டாசு பெட்டிகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை வரும் தீபாவளி வரை தொடரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News