தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆசிரியை கொலை: கணவர் வெறிச்செயல்

குளித்தலை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியையை கணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பட்டவர்த்தியை சேர்ந்தவர் விஷ்ரூத் (30). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது சென்னையை சேர்ந்த சுருதி (27) என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
Advertisement

இவர்கள் குளித்தலை பட்டவர்த்தியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஷ்ரூத் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக சுருதி பணியாற்றி வந்தார். இவர்களது மகன்களும் அங்கேயே படித்து வருகின்றனர். கடந்த 18ம் தேதி இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுருதியை, விஷ்ரூத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விஷ்ரூத் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் தாங்காமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுருதியின் கழுத்து, தோள்பட்டையில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இதை கண்ட மற்ற நோயாளிகள் அதிர்ச்சியில் ஓடினர். டாக்டர்கள் சுருதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுருதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய விஷ்ரூத்தை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News