அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆசிரியை கொலை: கணவர் வெறிச்செயல்
இவர்கள் குளித்தலை பட்டவர்த்தியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஷ்ரூத் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக சுருதி பணியாற்றி வந்தார். இவர்களது மகன்களும் அங்கேயே படித்து வருகின்றனர். கடந்த 18ம் தேதி இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுருதியை, விஷ்ரூத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விஷ்ரூத் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் தாங்காமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுருதியின் கழுத்து, தோள்பட்டையில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இதை கண்ட மற்ற நோயாளிகள் அதிர்ச்சியில் ஓடினர். டாக்டர்கள் சுருதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுருதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய விஷ்ரூத்தை தேடி வருகின்றனர்.