தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டிடம்: எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தலைமை மருத்துவர் மனோஜ்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல்வேறு நோய்களுக்கு அலோபதி மற்றும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் போன்ற வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவர்களும், நோயாளிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சென்னை காமராஜர் துறைமுகத்தின் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மணலி சி.பி.சி.எல். நிறுவன சி.எஸ்.ஆர். நிதி ரூ.2 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேற்று இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், மருத்துவ வசதிகளின் தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related News