தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு நிதியுதவி பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரிப் பணியில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணி வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 5018 நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1496 நடுநிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களால் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

அதன்படி மொத்த முள்ள 6514 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருடன் உபரியாக 5845 பேர் உள்ளன என்றும், நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்கள் 1340 உள்ளன என்றும் தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பை தவிர்க்கும் வகையில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி வழங்குவது குறித்து உரிய ஆணை வழங்க வேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்த அரசு, அதை ஏற்று அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தின்படி உபரியாக பணியாற்றி வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ஆணையிடுகிறது.

Advertisement

Related News