தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஆவணங்களில் உள்ளபடி சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை குறிப்பிட கோரி வழக்கு

மதுரை: சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் அரசு ஆவணங்களில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை ஒத்தி வைத்தது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரத்திற்காக போராடியவர். அனைத்து அரசு ஆவணங்களிலும், தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்களிலும் தற்போது வரை இடம் பெற்று வரும் பசும்பொன் உ..முத்துராமலிங்கத்தேவர் என்றே உள்ளது. ஆனால் குரூப் 2 எனப்படும் பிரிவிற்காக கடந்த 14-9-2024 அன்று நடைபெற்ற தேர்வில் வினா எண் 104ல் இடம் பெற்றுள்ள ஆங்கில அரசால் ‘வாய்ப்பூட்டு சட்டத்தின்’ மூலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் என்கிற வினாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் ஒன்றாக முத்துராமலிங்கனார் என்ற பெயரை விடையாக பயன்படுத்தப்பட்டு அதில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

ஆனால், இதே வினாத்தாளில் வினா எண் 87க்கான விடைகளில் கஸ்தூரி ரங்க அய்யங்கார் என்றும், வினா எண் 92க்கான விடைகளில் ஜி.பி.பிள்ளை என்றும் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்றும் உள்ளது. எனவே தற்போது அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர்களின்படியே அனைத்து தலைவர்களும் பொதுவெளியில் பயன்பாட்டில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடவேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட இயலாது. மனுதாரர் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement

Related News