தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஒப்பந்ததாரரை காரில் கடத்தி கொலை

கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே ராமராஜபுரம் மிதிபாறை மேடு பகுதியில் நேற்று மதியம், நின்றிருந்த காருக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில் கொலையானவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் (56) என்பதும், திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்ததும் தெரியவந்தது.
Advertisement

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை காணவில்லை என திண்டுக்கல் தாலுகா போலீசில் புகாரளிக்கப்பட்டதும் தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி பிரதீப் பார்வையிட்டார்.

முதற்கட்ட விசாரணையில், மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் முருகன் பொருளாளராக இருந்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே மர்ம கும்பல், முருகனை காரில் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான முருகன் மீது வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Related News