தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 15 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது. அந்த கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

Advertisement

அவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த மே 7ம் நாள் தொடங்கின. ஜூன் மாதமே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை இடங்கள் நிரம்பாமல் இருந்ததால் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட இதுவரை 96 ஆயிரம், அதாவது 76.2% இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன.

மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டதால் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 30 ஆயிரம் இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை. அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் வலிமையாக இல்லாவிட்டால், தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாக குறையும். தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால், உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Advertisement