தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் பில்லர் அமைக்க பள்ளம் தோண்டியபோது பூமிக்கடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘சிவ லிங்கம்’ கண்டெடுப்பு

*செங்கம் அருகே பரவசம்
Advertisement

செங்கம் : செங்கம் அருகே அரசு பள்ளியில் பில்லர் அமைக்க பள்ளம் தோண்டியபோது பூமிக்கடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘சிவ லிங்கம்’ கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடங்கள் மற்றும் நூலகம், ஆய்வகம் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் பில்லர் அமைப்பதற்காக பணியாளர்கள் 20 அடி பள்ளம் தோண்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை பள்ளம் தோண்டி வெளியேற்றிய மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது மிகவும் பழமையான ‘3 அடி கொண்ட சிவலிங்கம்’ மண்ணில் புதைந்து இருந்தது. இதைபார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து மண் இடுபாடுகளிலிருந்து சிவலிங்கத்தை பத்திரமாக மீட்டு எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தாசில்தார் முருகன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தேன்மொழி ஆகியோர் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கத்தை செங்கம் சிவன் கோயில் உட்புறம் வைத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பூமிக்கடியில் இருந்து கிடைத்த சிவலிங்கத்தை காண ஏராளாமான பக்தர்கள் அங்கு திரண்டு ‘ஓம் நமச்சிவாய’ என பக்தி முழக்கமிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

மீட்கப்பட்ட சிவலிங்கம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோன்றும் நிலையில் ஏதேனும் பழமையான சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News