தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய ஆசாமி கைது

சேலம்: சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மணிமேகலைதேவி வேளாண்மைத்துறை உதவி இயக்குனராக நாமக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த 11ம் தேதி 56 பவுன் நகை, ரூ.95 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Advertisement

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்து வரும் ஒரு மர்மநபர் வீட்டிற்குள் நுழைவது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிசிடிவியில் பதிவான நபர், கிருஷ்ணகிரியை சேர்ந்த தர்மராஜ் என்கிற தர்மன் (45) என்பது தெரியவந்தது.இதனையடுத்து சூரமங்கலம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் அரசு அதிகாரி சிவக்குமாரின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட தர்மன், வீட்டு பூட்டை கம்பியால் உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தர்மனிடம் இருந்து 42 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News