தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவ கல்லூரிகளில் டீன்களை நியமிக்க கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

Advertisement

மதுரை: மதுரையை சேர்ந்த வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனை டீன், கடந்த ஏப்.30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். இங்கு பல அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

மேலும் இதயம், கண், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ மையம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாகனங்கள் நிறுத்த வசதியின்மை, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிக கூட்டம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண நிரந்தர முதல்வரை (டீன்) பணியமர்த்துவது மிகவும் அவசியம். மதுரையில் மட்டுமின்றி தமிழகத்தில் கரூர், திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் டீன்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் மதுரை உள்பட காலியாக உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் இவ்வாறு கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, டீன்களை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக்கல்லூரிகளை திறப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்.3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement