தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்; அதிகாரிகள் கிடையாது: உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில்

சென்னை: அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்; அதிகாரிகள் கிடையாது என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவது தொடர்பான வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை தெரிவித்திருந்தார்.

முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஏற்கனவே அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு பெற்றுள்ள நிலையில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒதுக்க முடியாது என அரசு தெரிவித்ததற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலும் வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அரசு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தது. அரசின் மேல்முறையீடுக்கு எதிராக நீதிபதியிடம் திலகவதி புகார் அளித்திருந்தார். அப்போது, “எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தெரியாது. அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். இதற்கிடையே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

 

Related News